செவ். ஜூலை 1st, 2025

Views: 40

வணக்கம். இன்று ஆனி 23 ம் நாள் ஆனி உத்திர தரிசனம்.

தெரியுமா உங்களுக்கு

நாம் இன்று தொழில்நுட்ப துறையில் மிகவும் அபரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இருந்தாலும் இன்றைய உலகில் கணனி யுகத்தில் சூப்பர் கணினிகளின் சக்தி நாட்டின் நாளைய வளர்ச்சியை தீர்மானிக்கிறது.

இன்று உலகின் முக்கிய நாடுகளிடம் உள்ள சூப்பர் கணனிகளில் எண்ணிக்கை சீனா 219, அமெரிக்கா 116, இங்கிலாந்து 18, ஜப்பான் 29, பிரான்ஸ் 19, மற்றும் இந்தியா 3. உலகின் அதிவேக சூப்பர் கம்யூட்டர்களில் 43.8% சீனா தன் வசம் கொண்டுள்ளது. இதில் இந்தியா 0.6% மட்டும் பங்களிக்கிறது.

சூப்பர் கம்யூட்டர்களின் வேகம் பீட்டாபிளாப் எனும் அளவினால் மதிப்பிடப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் டிரிலியன் கணினிப்புகள் செய்யக்கூடிய கணனி ஒரு பீட்டாபிளாப் திறன் ஆகும்.

இந்தியவிடம் 3 சூப்பர் கணனிகள் உள்ளன, அவை பிரதியூஸ் (வானியல் ஆய்வு மையம்) 4 பீட்டாபிளாப் செயல்திறன், மிகிர் (தேசிய தட்பவெப்ப நிலையம்) 2.8 பீட்டாபிளாப் செயல்திறன், இங்க் 1(மென்பொருள் நிறுவனம்) 1.4 பீட்டாபிளாப் செயல்திறன்.

உலகின் சிறந்த 3 சூப்பர் கணனிகள் சமிட் (அமெரிக்க எரிசக்தி துறை) 200 பீட்டாபிளாப் செயல்திறன், சீர்ரா (அமெரிக்க எரிசக்தி துறை) 125.7, சன்வே டாய்குலைட் (சீனா தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர்) 125.4.

அனுபவ மொழிகள்

வாழ்க்கையில் அனைவரிடமும் உண்மையை சொல்லாதீர்கள்; அவசியமானவர்களிடம்
பொய்களை சொல்லாதீர்கள். – அனுபவசாலி யாரோ!!

இன்றைய திருக்குறள்

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின் – திருவள்ளுவர்

வாழ்க வளமுடன்! நலமுடன்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

one × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.