திங்கள். ஜூன் 30th, 2025

Views: 110

காலை வணக்கம்.

நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பம். இன்று சிலம்பாட்ட தினம்.

தமிழனின் தற்காப்பு மற்றும் போர் கலைகளின் ஒன்றான சிலம்பாட்டத்தை பாதுகாக்க மற்றும் அடுத்த தலைமுறை நம் சந்ததியினர்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

‘சிலம்பு’ என்றால் ‘ஒலித்தல்’ என பொருள்படும். சிலம்பம் கம்பு மூங்கில் மற்றும் பிரம்பு கழி கொண்டு தயாரிக்கப்படுகிறது.

திறப்பு,அறுப்பு,பூட்டு,அடி,குத்து,வெட்டு, வீச்சு என பலவகையான சிலம்பாட்டம் உள்ளது.

நமது சேர,சோழ,பாண்டிய மன்னர் காலங்களில் இது போர்க்கலையாக இருந்திருக்கிறது. ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டத்தில் சிலம்பு படை அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்திருக்கிறார்கள். கர்னல் அக்னி சிலம்பு கம்பு மற்றும் களரிகளை எரிக்க உத்தரவிட்டதாக வரலாறு செல்கிறது. ஆங்கிலேயர் அடக்கு முறைக்கு பின் இது கவனிப்பார் இல்லாமல் உள்ளது.

நமது மரபு மற்றும் வீர கலையான சிலம்பாட்டத்தை நம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வழி செய்வோம்.

வாழ்க தமிழ். வளர்க தமிழன் கலை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

eleven − five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.