Views: 31
வணக்கம். இன்று 19 நவம்பர் 323ம் நாள் தமிழ் கார்த்திகை 3ம் நாள் , இன்னும் 42 நாட்கள் உள்ளன ஆங்கில புத்தாண்டுக்கு. உலக ஆண்கள் தினம்.
தமிழகத்தில் பண்டையகாலத்தில் நீர்நிலைப் பெயர்கள் பற்றி அறிவோமா
'அருவி' - மலைப்பகுதில் தேக்கநீர் நேர்கோட்டில் மேலிருந்து விழுவது. 'ஆழிக்கிணறு' - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு. 'ஆறு' - ஓடும் நதி. 'உறைக்கிணறு' - மணற்பாங்கான இடத்தில் தோண்டி வட்ட வளையமிட்டு கட்டப்பட்ட கிணறு. 'ஊருணி' - மக்கள் பருகும் நீர் உள்ள நீர்நிலை 'ஏரி' - வேளாண்மைக்கு பாசன நீர்நிலை 'குண்டம்' - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர்நிலை 'குண்டு' - குளிப்பதற்கு ஏற்ற சிறுகுளம் 'கேணி' - அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு. வாழ்க வளமுடன்!! வாழ்க நலமுடன்!!