Views: 88
உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
சப்த கன்னியர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பிராம்ஹி: மேற்கு திசைக்கு அதிபதி. சரஸ்வதி அம்சமாக பார்க்கபடுகிறாள். மாணவர்கள் காயத்ரி மந்திரத்தை 108 பிரணாயமம் செய்யவேண்டும்
“ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்”
மகேஸ்வரி: வடகிழக்கு திசைக்கு அதிபதி. கோபம் குறைந்து சாந்தம் அடைய 108 முறை பிரணாயமம் செய்ய வேண்டும்.
“ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்”
வைஷ்ணவி: செல்வ வளம் பெற வழிபட காயத்ரி மந்திரம்
“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்”
சாமுண்டி: யானையின் தோலை ஆடையாக அணிந்தவள். சப்த கன்னியர்களில் முதலில் தோன்றியவள்.
“ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்”
வராஹி: வராஹ முக அமைப்பில் இருப்பவள். துன்பம் விலக 108 முறை
“ஓம் சயாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்”
இந்திராணி: உயிர் காப்பதிலும் திருமண வரம் தருபவள்.
“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்”
கவுமாரி: அஷ்ட திக்குகளுக்கும் அதிபதி. குழந்தை பாக்கியம் கிட்ட 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
“ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கெளமாரி ப்ரசோதயாத”
பொன்மொழி: நல்லவனை இகழ்கின்ற தீயவன், வானத்தை நோக்கித் துப்புவனைப் போன்றவன்.-புத்தர்.
நன்றி : தினத்தந்தி