வி. மே 22nd, 2025

பக்தி

ByBBAuthor

மார்ச் 26, 2017 #Tips

Views: 14

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.!

பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.!

தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.!

பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகி விடும்.!

இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகி விடும்.!

பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.!

செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.!

வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகி விடும்.!

பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது.!

இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!

ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகி விடுகிறான்.!

மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

eight + sixteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.