திங்கள். ஜூலை 28th, 2025

Views: 346

அன்பில் பல வகை உண்டு. இடம் மாறி செலுத்தப்பட்ட அன்பே துயரங்களுக்குக் காரணம். அன்பில்லாமல் எந்த உருவாக்கமும் இல்லை. நமது பிறப்பும் கூட அன்பைச் சார்ந்ததே. அன்பில் 12 வகைகள் உண்டு.
1.இரக்கம் – எளியவர் மேல் காட்டுகிற அன்பு.
2.கருணை – அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகிற அன்பு.
3.ஜீவகாருண்யம்- எல்லா உயிர்களிடத்திடமும் அன்பு.
4.பந்தம் – உறவினர்களிடத்து நாம் செலுத்தும் அன்பு.
5.பட்சம் – முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு.
6.விசுவாசம் – வேலை செய்பவர் தன் முதலாளியிடம் செலுத்தும் அன்பு.
7.பாசம் – தாய், குழந்தைகளுக்கிடையே உள்ள அன்பு.
8.நேசம் – தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு.
9.காதல் – கணவன், மனைவிக்கிடையே உள்ள அன்பு.
10.பக்தி – கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு.
11.அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு.
12.அபிமானம் – ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின் மீது செலுத்தப்படுகிற அன்பு.
அன்பை நிலை மாறிச் செலுத்தினால் சிக்கல், துயரம், நிலை உணர்ந்து செலுத்தப்படும் அன்பு நன்மை தரும். *படித்தேன்; பகிர்ந்தேன்*

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

ten + thirteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.