இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல, பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல. அது எது? உலகை எல்லாம் உப்பிட்டு வளர்த்தவர் யார்? நின்று கொண்டே இருந்துவிட்டு பலருக்கும் வழி கூறுவான். உழைக்க உழைக்க உடலெல்லாம் தோன்றும் - அது என்ன? கையால் இழுத்தால் அசையும் நாக்கு, கணீரென்று அனைவரையும் அழைக்கும் - அது என்ன? ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன? ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன? ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்? அவனுக்கு காவலுக்கு… Read More