X

Shivan

ஆருத்ரா தரிசனம்!

திருவாதிரை நோன்பு (ஆருத்ரா தரிசனம்!) மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர். மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை… Read More

ஐந்தின் தத்துவம்

வணக்கம்!! நம்முடைய இந்து சமய முறையில் சிவனின்ஐந்தின் தத்துவம்,என்ன என்பதை நான் படித்து தெரிந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன். 1.பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் 2. பஞ்சாட்சரம் ஐந்து நமசிவாய - தூல பஞ்சாட்சரம் சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம் சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம் சிவசிவ - காரண பஞ்சாட்சரம் சி - மகா காரண பஞ்சாட்சரம் 3.சிவமூர்த்தங்கள் 1.பைரவர் -வக்கிர மூர்த்தி 2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி 3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி 4.நடராசர் -ஆனந்த மூர்த்தி 5.சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி 4.பஞ்சலிங்க சேத்திரங்கள் 1.முக்திலிங்கம் -கேதாரம் 2.வரலிங்கம் -நேபாளம் 3.போகலிங்கம் -சிருங்கேரி 4.ஏகலிங்கம் -காஞ்சி 5.மோட்சலிங்கம் -சிதம்பரம் 5.பஞ்சவனதலங்கள் 1.முல்லை வனம் -திருக்கருகாவூர் 2.பாதிரி வனம் -அவளிவணல்லூர் 3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி 4.பூளை வனம் -திருஇரும்பூளை 5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர் 6.பஞ்ச ஆரண்ய தலங்கள் 1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம் 2.மூங்கில் காடு -திருப்பாசூர் 3.ஈக்காடு -திருவேப்பூர் 4.ஆலங்காடு -திருவாலங்காடு… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.