10 கட்டளைகள்
நாம் நினைவில் கொள்ள வேண்டிய சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!! இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள். நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள். விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள். பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள். விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள். கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள். மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள். கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள். Read More