அறிவோம் கடுக்காய்
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.உஷ்ணத்தால் பித்த நோய்களும்,காற்றினால் வாத நோய்களும்,நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. கடுக்காய் பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன. கடுக்காய் மர வகையைச் சார்ந்தது. 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக்கூடியது. பல ஆண்டுகள் வாழும். கடுக்காய் மரத்தின் இலைகள் பசுமையாகவும,; தனித்தும், 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் இணைகளாகவும் காணப்படும். கடுக்காய் பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை, கிளைகளின் நுனியில் காணப்படும். கடுக்காய் முதிரா கனிகள் பசுமையானவை, முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. கடுக்காய் கனிகள் 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காணப்படும். சமவெளியில் அரிதாக… Read More