X

Health Tips

ஆரோக்கிய வாழ்விற்கு சில குறிப்புகள்

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும். மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள். அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும். வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும். முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது. இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும். முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும். எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும். பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்… Read More

குறிப்பு

நாயுருவி வேரைக் கொண்டு பல்விளக்கினால் பற்களில் காறை இருந்தாலும் பழுப்பு இருந்தாலும் நீங்கித் தூய்மையாகும். கரிசலாங்கண்ணி கொண்டும் பல்விளக்கலாம். பல்வலி, பல்சொத்தை, ஈறு கூச்சம் ஆகியவற்றுக்கு வெங்காயச் சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்புளிக்கவும். கண்டங்கத்தரிக் காய்/ பழத்தைக் காயவைத்து சேர்த்து வைத்திருக்க. விதைகளைச் சுட்டுப் புகையைச் சொத்தைப் பல்லில் படச் செய்தால் சொத்தை நீங்கும்; பல்வலியும் நீங்கும். புளியும் உப்பும் கலந்து ஈறுகளில் தேய்த்தால் பல்லரணை என்னும் ஈறு வீக்கம் போகும்; பல் வலியின் போது சொத்தைப் பல்லின் மேல் வைத்தால் வலி நீங்கும் Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.