X

Aadi 18

இன்று ஆடி 18

வணக்கம் அன்பர்களே. இன்று ஆடி மாதம் 18ம் நாள். தமிழ் மாதங்களில் நான்காவதாக வருவது ஆடிமாதம் ஆகும். தமிழ் மாதத்தில் ஆடி18 அல்லது ஆடி பெருக்கு மிகவும் முக்கிய நாளாகும். பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் நமக்கு பஞ்சம் இல்லாமல் தரவேண்டும் என இயற்கை அன்னையை வழிபடும் தினமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தில் இந்த மாதம் கடக ராசி. இது சந்திர பகவானுக்குரிய ராசியாகும். சந்திரன் நீர் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு காரகனாகிறார். 'ஆடி பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் தமிழர்களின் வழக்கத்தில் ஒன்று. நாம் அனைவரும் நீர் வளங்களுக்கு நன்றி சொல்வோம். இன்று தமிழகத்தின் புண்ணிய நதியான காவிரியில் பெண்கள் அம்மனை வழிபட்டு சித்திர அன்னம் படைத்தது சுமங்கலிகள் புது தாலி கயிறு மாற்றி வழிபடுவார்கள். மேலும் ஆடி பெருக்கு பற்றி அறிய இங்கு சுட்டவும் Read More

ஆடிப்பெருக்கு

ஆடியும் இயற்கை அறிவியலும் சூரியனின் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆண்டினை உத்திராயனம், தட்சிணாயனம் என இரண்டு பாதியாக நம் முன்னோர்கள் வகுத்தனர். சூரியனின் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆண்டினை உத்திராயனம், தட்சிணாயனம் என இரண்டு பாதியாக நம் முன்னோர்கள் வகுத்தனர். அதன்படி தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களை உத்திராயனம் என்றும் ஆடி முதல் கார்த்திகை வரையிலான அடுத்த ஆறு மாதங்களை தட்சிணாயனம் என்றும் அழைத்தனர். உத்திராயனம் என்பது சூரியக் கதிர்கள் வடதிசை நோக்கி நகர்தல், தட்சிணாயனம் என்பது அவை தென்திசை நோக்கி நகர்தல். இயற்கையின் விதிப்படி தை முதல் ஆனி மாதம் வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன், தென் திசை மீது தன் பார்வையை திருப்பும் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது. இது மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். விதைத்த பயிர்கள் செழித்து வளரும். அதனால்தான்… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.