X

அறிவோம்

அறிவோமா உடல்

வணக்கம். இது ஒரு அறிவியல் பதிவு. நாம் எல்லோரும் அறிந்த அல்லது மறந்த நம் உடல் பற்றிய ஓர் தொகுப்பு. மனித உடலில் 93 சதவிகிதத்திற்கும் அதிகமானவை மூன்று இரசாயன கூறுகளைக் கொண்டிருக்கின்றன. ஆக்ஸிஜன் (65%), கார்பன் (18.5%) மற்றும் ஹைட்ரஜன் (10%). நைட்ரஜன் (3%), கால்சியம் (1.5%) மற்றும் பாஸ்பரஸ் (1%) ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. உயிரணுக்களின் ஆயுள்காலம் வெள்ளை இரத்தம் - 1 நாளுக்கு குறைவாக. தோல் செல்கள் - 30 நாட்கள். கல்லீரல் செல்கள் - 12-18 மாதங்கள். தசை செல்கள் - 15 ஆண்டுகள். வாழ்க வளமுடன்! நலமுடன் Read More

நலமுடன் வாழ அறிவோம் மூலிகை – தும்பை

இன்று நம்முடைய வாழ்வில் தெருவோரத்தில் வளர்ந்து இருக்கும் இரண்டு அடி செடியின் பயன்கள் பற்றி பார்ப்போம். இது ஒரு தகவல் பகிர்வு. அந்த செடியின் பெயர் "தும்பை". Read More

இன்று சித்திரை 23ம் நாள்

காலை வணக்கம். நமது பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பம். இன்று சிலம்பாட்ட தினம். தமிழனின் தற்காப்பு மற்றும் போர் கலைகளின் ஒன்றான சிலம்பாட்டத்தை பாதுகாக்க மற்றும் அடுத்த தலைமுறை நம் சந்ததியினர்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 'சிலம்பு' என்றால் 'ஒலித்தல்' என பொருள்படும். சிலம்பம் கம்பு மூங்கில் மற்றும் பிரம்பு கழி கொண்டு தயாரிக்கப்படுகிறது. திறப்பு,அறுப்பு,பூட்டு,அடி,குத்து,வெட்டு, வீச்சு என பலவகையான சிலம்பாட்டம் உள்ளது. நமது சேர,சோழ,பாண்டிய மன்னர் காலங்களில் இது போர்க்கலையாக இருந்திருக்கிறது. ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டத்தில் சிலம்பு படை அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்திருக்கிறார்கள். கர்னல் அக்னி சிலம்பு கம்பு மற்றும் களரிகளை எரிக்க உத்தரவிட்டதாக வரலாறு செல்கிறது. ஆங்கிலேயர் அடக்கு முறைக்கு பின் இது கவனிப்பார் இல்லாமல் உள்ளது. நமது மரபு மற்றும் வீர கலையான சிலம்பாட்டத்தை நம் சந்ததியினர் தெரிந்து கொள்ள வழி செய்வோம். வாழ்க தமிழ். வளர்க தமிழன் கலை. Read More

அறிவோம் புடலங்காய்

தமிழ்நாட்டில் பிரபலமான காய்கறி வகைகளுள் ஒன்று.கல்யாண விருந்து என்றாலே புடலங்காய் கூட்டு இல்லாத பந்தி விருந்தை பார்க்க முடியாது. புடலங்காயில் பல வகைகள் உள்ளது. குட்டைப் புடலங்காய், வெள்ளைப் புடலங்காய், ஹைப்ரிட் புடலங்காய் என பல வகையில் மார்க்கெட்டில் விற்கின்றனர். புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில், நிச்சயம் சமைக்கப்படும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள், தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காயை நம் முன்னோர்கள் காலந்தொட்டு, நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன் அறிந்துதான், சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். 100 கிராம் புடலங்காயில் உள்ள சத்துகள் ஆற்றல் – 86.2 கிலோ கலோரி கொழுப்பு – 3.9 கிராம் சோடியம் – 33 மி.கி பொட்டாசியம் – 359.1 மி.கி நார்ச்சத்து – 0.6 கிராம் புரதம் – 2 கிராம் விட்டமின் ஏ 9.8… Read More

​வேப்பமரத்தின் மகிமைகள்

வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது. வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ‘அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும். வேப்ப மரத்தின் எண்ணற்ற… Read More

வரகு அரிசி

பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். வரகு அரிசி. சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது. இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.  இதன் வயது 5 மாதங்கள்.அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். குறிப்பாக, களர் மண்ணில்கூட விளையும் தன்மையுடையது. ஆடிப் பட்டம், வரகு சாகுபடிக்கு ஏற்றது. நான்காம் மாதத்தில் கதிர் பிடிக்க ஆரம்பித்து, ஐந்தாம் மாதத்தில் முற்றி அறுவடைக்கு வந்து விடும். ஒரு குத்துக்கு 15 முதல் 20 சிம்புகளும், சிம்புக்கு 5 முதல் 8… Read More

மருதாணி

இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும். மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி… Read More

மலர்கள் சூடுவது மற்றும் நன்மைகள்

மலர்கள் தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கூட. ஆம், நம் அழகாக, அழகிற்காக, காதலின் அடையாளமாக, பெண்களின் கவர்ச்சியாக பார்க்கும் பல பூக்கள் சிறந்து மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளன. நமக்கு தெரிந்தவரை, வாழைப்பூ, முருங்கை பூ மட்டும் தான் உன்ன உகந்தது என எண்ணி வருகிறோம். ஆனால், பெண்கள் தலையில் சூடும் சில பூக்களும் கூட உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கின்றது..  பூ சூடுவது என்பது ஒரு பாரம்பரியமான பழக்கம். இதை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்று இருக்கிறார்கள். ஆரோக்கியமான பழக்கம் இது.தினமும் பூ பறிப்பது ஒரு நல்ல அனுபவம். பொறுமையானவர்கள் மட்டுமே பூ பறிக்க முடியும். அல்லது பூ பறிக்க கற்று கொள்வது பொறுமையை வளர்க்கும். பொறுமைக்கு பூமா தேவியை உதாரணமாக சொல்வர். பூவை பறிப்பவர்களிடத்தில் சில அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. Read More Read More

அறிவோம் முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறு கொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் முப்பட்டை வடிவமாக மூடிக்கொண்டும், பலூன் போன்று உப்பிக் கொண்டும் இருக்கும். அந்தக் காய்க்குள் மூன்று அறை உண்டு. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு விதை வீதம் மூன்று அறைக்குள் மூன்று விதை இருக்கும். இந்த விதை நன்கு முற்றாத போது பச்சையாக உருண்டையாக இருக்கும். விதை நன்கு முற்றிக் காய்ந்தவுடன் உருண்டையாக, கறுப்பு… Read More

அறிவோம் கடுக்காய்

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.உஷ்ணத்தால் பித்த நோய்களும்,காற்றினால் வாத நோய்களும்,நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. கடுக்காய் பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன. கடுக்காய் மர வகையைச் சார்ந்தது. 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக்கூடியது. பல ஆண்டுகள் வாழும். கடுக்காய் மரத்தின் இலைகள் பசுமையாகவும,; தனித்தும், 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் இணைகளாகவும் காணப்படும். கடுக்காய் பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை, கிளைகளின் நுனியில் காணப்படும். கடுக்காய் முதிரா கனிகள் பசுமையானவை, முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. கடுக்காய் கனிகள் 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காணப்படும். சமவெளியில் அரிதாக… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.