X

News

உலக மக்கள்தொகை தினம்

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. 2011 அக்., 31ல் 700 கோடியாக உயர்ந்தது. தற்போது இது 760 கோடியாக உள்ளது. இது 2050ல், 980 கோடியாகவும், 2100ல் 1,120 கோடியாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையில், இந்தியா 16 சதவீதத்தை பெற்றுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, 2024ம் ஆண்டு சீனாவை முந்தி விடும் என ஐ.நா., புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. சீனா மக்கள் தொகை தற்போது 142 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு சீனா. இச்சாதனையை இன்னும் ஏழு ஆண்டுகளில் இந்தியா முறியடித்துவிடும் என ஐ.நா., தெரிவிக்கிறது. உலகின் மக்கள்தொகை தற்போது 760 கோடியாக உள்ளது. இதில் முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை 137 கோடி. இரண்டாவது… Read More

நிதிக்கல்வி

வணக்கம். அண்மையில் விகடனில் படித்தவை. உங்கள் அன்புப் பிள்ளைகளின் நிதி எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல் இருக்க மாட்டீர்கள். எல்லா பெற்றோர்களின் கனவும் என் மகன்/மகள், எதிர்காலத்தில் நன்றாக வாழ வேண்டும்; யாரையும் எதிர்பார்த்து இருக்கக் கூடாது' என்பதே. அதற்காகத்தான்எப்பாடுபட்டாவது அவர்களுக்கு நல்ல வருமானம் ஈட்டித்தரும் கல்வியை அளித்துவிட வேண்டும்' என நினைக்கின்றனர். இதன் விளைவாகவே கல்லூரிகளும் சிறப்பு வகுப்புகளும் அதிகரிக்கின்றன. ஆனால், பெற்றோர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி அவசியம்தான். ஆனால், வாழ்க்கைப்பாடம் அதைவிட அவசியம். ஒருகாலத்தில், வாழ்க்கை என்பது தனக்கான உணவை தானே தயாரித்து உண்டு வாழ்வது என்று இருந்தது. நாளடைவில் அது அடுத்து வரும் சந்ததிக்கான தேவையையும் சேர்த்து நாம் சேமித்துவைக்கவேண்டிதாயிற்று. குடும்பம் என்ற அமைப்புக்குள் பொறுப்பு என்ற சுமை தானாகவே எல்லோர் மீதும் வலிந்து திணிக்கப்பட்டுவிடுகிறது. அதனால் எதிர்காலத்தை எதிர்கொள்ள நம் பிள்ளைகளைத் தயார்செய்யவேண்டியிருக்கிறது. பிள்ளைகளுக்கு பணம், சேமிப்பு, முதலீடு என்பதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொடுக்கவேண்டியிருக்கிறது.… Read More

சர்வதேச சதுரங்க தினம்

1924 ஆம் ஆண்டு ஜுலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. ஜுலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் சூலை 20, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது. புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு… Read More

தந்தையர் தின வாழ்த்துக்கள்

தான் பல இடத்தில் தவறி விழுந்தாலும், தன் பிள்ளை எந்த இடத்திலும் தவறி விழக்கூடாது என நினைக்கும் தெய்வம் அப்பா. அன்பை உள்ளே வைத்துக் கொண்டு எதிரிப் போல் தெரியும் ஒரே உறவு அப்பா ! ‘முடியாது’ என்ற ஒற்றை வார்த்தையில் கொடுத்த செயற்கை வலியால் ‘முடியும்’ என்ற நம்பிக்கையை விதைத்தவர் அப்பா ! கொண்டுவந்தால் தான் தந்தை என்று யார் பொய் சொன்னது தான் கொண்டதை எல்லாம் கொடுப்பவர் தந்தை உண்மை சொல்கிறது ! மகனிடம் தோற்பதை லட்சியமாய் கொண்டவர்! மகன் தோற்றாலும் வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் ! மகன் நடைபயில மகன் வேகத்துக்கு நடப்பவர் ! மகன் ஒடுவதை ஒதுங்கி நின்று ரசிப்பவர் ! முதுமையில் மகன் கரம் பிடித்து குழந்தைப் போல் நடப்பார் அப்பா ! பேரன் பேத்தியிடம் விளையாடும் போது அம்மாவை பாட்டியாக பார்க்கலாம் பேரன் பேத்தியிடம் விளையாடும் போது அப்பாவை குழந்தையாக தெரிவார் !… Read More

உலக காற்று தினம்

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது. Read More Read More

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138[2] மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது. குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய்வதை தடுத்து அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1986 ஆம் ஆண்டு குழந்தைகள் நீதி சட்டத்தை இயற்றியது. மேலும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளிலும், விளையாட்டு திடல்களிலும் இருக்க வேண்டிய நேரத்தில், தொழிற்சாலைகளிலும் பண்ணைகளிலும், செங்கற் சூளைகளிலும், சுரங்கங்களிலும் வேலை செய்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டே உலகில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 21 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 11 கோடி பேர் பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. Read More Read More

உலக தைராய்டு தினம்

உலக தைராய்டு தினம் இன்று; மனிதனின் கழுத்துப்பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பி, நாளமிள்ளா சுரப்பிகளின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.  தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இது கழுத்தின் கீழ்ப் பகுதியின் மையத்தில் உள்ளது. உடலில் ஏற்படும் வளர் சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்த தைராக்ஸின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்பவை இந்த ஹார்மோன்கள்தான்.Read More Read More

உலக பல்லுயிர் பெருக்க தினம்

இந்த பூமி பந்தில் மனிதர்கள் மட்டும்மல்ல, பூரன், பூச்சி முதல் காண்டாமிருகம் வரை அனைத்துவிதமான காட்டு, நாட்டு விலங்கினங்களும், பறவைகளும், கடல் வாழ் உயிரினங்களும் வாழக்கின்றன. மனிதன்க்கு இந்த உலகத்தில் வாழ எவ்வளவு உரிமையுள்ளதோ, அதே அளவுக்கு, ஏன் அதை விட அதிகமான உரிமை மற்ற உயிரினங்களுக்கும் உள்ளது. ஆனால், இந்த பூமி நமக்கு மட்டுமே என்கிற நினைப்பில் வாழ்வது மனித இனம் மட்டுமே. மற்ற எந்த உயிரினமும் இங்கு நாம் மட்டுமே வாழ வேண்டும் என நினைப்பதில்லை. பார்க்கும் இடம்மெல்லாம் நம்முடையதாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பு மனிதனிடத்தில் மட்டுமே உண்டு. மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150… Read More

சர்வதேச அருங்காட்சியக தினம்

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன்றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும். இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன. Read More Read More

உலக குடும்ப நாள்

இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் "விரிசல்' உருவாகிறது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது. குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டுள்ளது.Read More Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.