புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Read More
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Read More
ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து, நிறைந்த மனத்துடன் இதை கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை மார்ச் மாதம் பௌர்ணமியன்று கொண்டாடப்படும். ஹோலி பண்டிகை கொண்டாடும் விதம் கிருஷ்ண பகவான் தன் குழந்தை பருவத்திலும், பால்ய பருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, `பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், `குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர். ஹோலி பண்டிகையின் புராணம் இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என… Read More
'ஒற்றை ஏர் கூட இல்லாதவன் வாழ வக்கற்றவன்’ என்பது பழமொழி. இதற்கு ஏற்றார் போல விவசாயிகள் வீடு பசுக்களையும், பாரம்பர்ய காளைகளையும் வளர்த்து வந்தனர். பால் மோகம் அதிகமான காலகட்டத்துக்குப் பிறகு நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை குறைத்து வெளிநாட்டு கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட இறைச்சித் தட்டுப்பாட்டை போக்கிக்கொள்ள தமிழகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட இடங்களில் இருந்து நான்கு வகையான நாட்டுக்காளைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதில் ஓங்கோல், கிர் போன்ற நாட்டுகாளைகளும் அடக்கம். அர்ஜெண்டினா, பிரேசில், பராகுவே, அமெரிக்கா, கொலம்பியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் முதன்முதலாய் இறக்குமதி செய்யப்பட்ட காளைகள் நமது காளைகள்தான். 1854 முதல் 1926 வரை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 266 காளைகள் மற்றும் 22 பசுக்களை கொண்டு கரு உருவாக்கப்பட்டது. இப்படி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு பிறந்த காளைகளை பிரம்மன் அல்லது பிரம்மா… Read More
உங்கள் பக்கத்தில் இருப்பவர் யார்? நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”. தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை. எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்?… Read More
ஓயாமல் வாயடிக்கும் டிவி, தொட்டால் சிலிர்க்கும் ஸ்மார்ட் போன், நகக் கண்களில் விரையும் தொடு திரை. இப்படி குழந்தைகளைச் சுற்றிலும் ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் பேசுவது மெல்லக் குறைந்து வருகிறது. அப்படியே பேசினாலும் குறுந்தகவல் பாஷை போல ஓரிரு வார்த்தைகளில் முடிந்து விடுகிறது. இதனால் குழந்தைகள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தவே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த தயக்கம் அவர்களது வாழ்க்கை முழுவதும் தாழ்வு மனப்பான்மையாகப் படர்ந்து அவர்களது வளர்ச்சியை துவக்கத்திலேயே தடுக்கிறது. தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லும் குழந்தைகளால் தான் மிகப்பெரிய லட்சியங்களை எட்டித் தொட முடியும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மாபெரும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நின்று கொண்டிருக்கும்., அவர்கள் முன்பு ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கான பதில் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு தெரிந்திருக்கும். ஆனால் எனக்கு தெரியும் என்று சொல்ல ஏதாவது ஒரு சில குழந்தைகளே முன்வருகின்றன. அவர்களில் சிலரையும் யாராவது சொல்… Read More
? நமக்கு சங்கடங்கள் வரும் போது முதலில் கடவுளைத்தான் நினைப்போம். மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. எனவே தினமும் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது. அவ்வாறு கோவிலுக்கு தினமும் செல்ல முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையை அமைத்து கடவுள் படங்களை வைத்து வழிபடலாம். வீட்டில் பூஜை அறை எப்படி இருக்கவேண்டும் என பார்ப்போம். ? நம் வீட்டில் பூஜை அறையை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்க வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ? பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணங்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். ? பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில்… Read More
ஓடி ஆடி தெருக்களில் குழுவாக விளையாடியதை இனி கதைகளில் மட்டுமே படிக்க வேண்டும் போல ஏனென்றால் இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட்தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை. கிராமத்து விளையாட்டுக்கள் விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று. ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி, கோலாட்டம், பாண்டி, கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க… Read More
http://www.youtube.com/watch?v=WFhLtO5kFe0 Read More
TeachersFirst is an online community for teachers by teachers. With thousands of lessons, units, and reviewed web resources for K-12 classroom teachers, our website is designed to enrich teaching and learning for both teachers and their students. TeachersFirst celebrates the very best books and ideas.http://www.teachersfirst.com/100books.cfm Read More
In this world nothing comes for free including education. But guess what http://openmentor.net provides free webinars on different topics like basics of computer science , spoken English, etc.. which can be made use of by students, elders, home makers etc. All that is required is register and attend the specified times sessions wherein a tutor is online teaching on each concepts. Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.