X

பரிகாரங்கள்

தைஅமாவாசை – 11-02-2021

மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். வாழும் காலத்தில் பெற்றோரை பணிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு ஈடாக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணரவும் வேண்டும். Read More Read More

திருவிளக்கு ஏற்றியதும் சொல்ல வேண்டிய மந்திரம்

மாலையில் திருவிளக்கு ஏற்றியதும் குடும்பத்தினர் அனைவரும் சொல்ல வேண்டிய அபூர்வ மந்திரம் இது சிவம் பவது கல்யாணம் ஆயுள் ஆரோக்ய வர்தனம் மம துக்க விநாசாய ஸந்த்யா தீபம் நமோ நம: #பொருள் மங்களம் உண்டாகவும், ஆயுளும் ஆரோக்யமும் பெருகவும், எனது துன்பங்கள் எல்லாம் நீங்கவும், இந்த மாலை வேளையில் நான் சந்தியா தீபம் ஏற்றி வணங்குகிறேன். Read More

குடும்பத்தில் ஒரே ராசி கொண்ட இரண்டிற்கும் மேற்பட்டோர் செய்ய வேண்டிய பரிகாரம் !!!

கணவன்-மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கக் கூடாது என்பது ஜாதக விதி. திருமணத்திற்கு முன்பே ராசி நட்சத்திர பொருத்தம் உட்பட அனைத்து பொருத்தங்களும் பார்த்தே சேர்க்கிறோம். இருந்தாலும் காதல் திருமணம் புரிவோர் இந்த பொருத்தங்கள் பார்க்காமல் வாழ்க்கையில் இணைந்து விடுகின்றனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் இதே போல ஒரு ராசியில் பிறக்கின்றனர். இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும். ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஒரே ராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும். ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் கடலோரமாக உள்ள ஸ்தலத்தில் சென்று நீராடி ஸ்வாமி தரிசனம் செய்யலாம். இதை வருடம் ஒரு முறையாவது கடைபிடிக்கலாம். ஒரே ராசிக்காரர்களாக இருக்கும் பட்சத்தில் ஏழரைச் சனி,… Read More

அனைத்து ராசிக்கார்களுக்கும் வெற்றிலை பரிகாரம்

மேஷ ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் அன்று முருகனை பூஜித்து சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும். ரிஷப ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிபட்டு சாப்பிட வேண்டும். மிதுன ராசிக்காரர்கள் புதன் அன்று வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டு வர வேண்டும். கடக ராசிக்காரர்கள் மாதுளம் பழத்தை வெற்றிலையில் வைத்து வெள்ளிக்கிழமைகளில் காளியை வழிபட்டு உண்ண வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள் வியாழன் தோரும் வெற்றிலையோடு வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிபட்டு உண்டால் துன்பங்கள் நீங்கும். கன்னி ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் மிளகு மற்றும் வெற்றிலை வைத்து இஷ்ட தெய்வத்தை பூஜித்து உண்ண வேண்டும். துலாம் ராசிக்காரர்கள் கிராம்பு மற்றும் வெற்றிலை வைத்து வெள்ளி அன்று இஷ்ட தெய்வத்தை வணங்கி உண்ண வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் அன்று வெற்றிலையோடு பேரிச்சம்பழத்தை வைத்து இஷ்ட தெய்வத்தை பூஜித்து சாப்பிட வேண்டும். தனசு ராசிக்கார்கள் வியாழக்கிழமைகளில்… Read More

காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் !

காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம் காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்! ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம் நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி! *படித்தேன்; பகிர்ந்தேன்* Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.