கோடை கால சத்தான உணவுகள்
கோடை காலம் வந்துவிட்டால் எந்தமாதிரியான சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்த ஹெல்த்-டிப்ஸ்Read More Read More
கோடை காலம் வந்துவிட்டால் எந்தமாதிரியான சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்த ஹெல்த்-டிப்ஸ்Read More Read More
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும். மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள். அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும். வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும். முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது. இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும். முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும். எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும். பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்… Read More
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்? 1. நுரையீரல் சுத்தமாகும். 2. சளியை ஒழுச்சு கட்டிடும். 3. வாயுத் தொல்லை என்பதே வராது. 4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.… Read More
சமையல், அது ஒரு வேலை... இல்லையில்லை அது ஒரு கலை என்கிறார் ஒருவர். சமையல் என்பது சயின்ஸ் என்று சொல்கிறார் ஒருவர். எது எப்படியோ சமையலில் பலவகை உண்டு. ஒவ்வொரு சமையல் முறைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. சில சமையல் முறைகளால் சமைக்கப்பட்ட உணவுகளில், சத்துகள் அப்படியே இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சமையல் போன்ற சமையல் முறைகளில் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. மாறாக, கெட்டக் கொழுப்பும் சேர்ந்துவிடும். இதன் அடிப்படையில் நாம் உண்ணும் உணவு பாசிட்டிவ், நெகட்டிவ், நியூட்ரல் என வகைப்படுத்தப்படுகிறது. இதில் எது உடலுக்கு நல்லது, எவற்றைத் தவிர்க்கவேண்டும்.. பாசிட்டிவ் உணவு முறை பெரும்பாலான சத்துகள் அப்படியே கிடைப்பதை பாசிட்டிவ் உணவுகள் என்கிறோம். உதாரணமாக பழங்கள், சமைக்காத காய்கறிகளைச் சாப்பிடுவது, பச்சடி, பழச்சாறு, இளநீர், தயிர், நீர்மோர், இட்லி, இடியாப்பம், நீர்க்கொழுக்கட்டை, பொங்கல், எண்ணெய் இல்லாத தோசை, சப்பாத்தி போன்றவற்றைச் சொல்லலாம். நெகட்டிவ் உணவு முறை சத்துகள் நீங்கி கெட்டக்… Read More
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க, கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க, ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற வைராக்கியம்.. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.வறுமையால்உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது… Read More
சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன. தோசை, இட்லி, வடை, பப்படம், முறுக்கு என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நோயின் பாதிப்பு நீங்க கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. உடல் சூடு தணிய இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது. உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம்… Read More
எந்த ஒரு ஆசனமும் செய்த பின் அதற்கு மாற்று ஆசனம் செய்ய வேண்டும்.அப்போது தான் முழு பலன் கிடைக்கும்..சில முக்கிய ஆசனங்களும் அவற்றுக்கான மாற்று ஆசனங்களும் இப்போது பார்க்கலாம்.. பத்மசனம் ..............சுகாசனம்(சாதாரணமாகஉட்காருதல்) யோகமுத்ரா ............புஜங்காசனம்,மச்சாசனம், பிறையாசனம். பச்சிமோத்தாசனம்.......சக்க்ராசனம்,தனூராசனம். விபரீதகரணி.................மச்சாசனம்,பிறையாசனம். சர்வாங்காசனம்..............மச்சாசனம்,பிறையாசனம், ஹலாசனம் ...................சக்கராசனம்,மச்சாசனம், பிறையாசனம்.பச்சி மோத்தாசனம். புஜங்காசனம்..................யோகமுத்ரா. சலபாசனம்.....................உத்தனபாதாசனம். தனூராசனம்...................ஹலாசனம்,பச்சிமோத்தாசனம். உசர்ட்டாசனம்.............சர்வாங்காசனம்,ஹலாசனம். மச்சாசனம்....................சர்வாங்காசனம்,பச்சிமோத்தாசனம். சிரசாசனம்......................நின்றபாத ஆசனம். பாத ஹஸ்தாசனம்.......ஹலாசனம்,சக்ராசனம், பிறையாசனம். சக்ராசனம்....................யோகமுத்ரா,ஹலாசனம். பிறையாசனம்.............பாதஹஸ்தாசனம், ஜானு சீராசனம்............பச்சிமோத்தாசனம். வஜ்ராசனம்.....................மகாமுத்ரா,யோகமுத்ரா. சுப்தவஜ்ராசனம்...........விபரீதகரணி,சர்வாங்காசனம். உட்டியானா...................நெளவ்லி. நெளவ்லி. ....................உட்டியானா Read More
சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும். பற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம். சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச் செய்யும். நாக்கை குழல் போல் மடித்து மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம். உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும். பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது. நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல். பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல். சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல். மேல் உடலைத் தூய்மையாக்கும். மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல். கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல். Read More
உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒரு முகப்படுத்துவதே யோகக் கலை. இதற்கு சங்கமம் என்ற பொருளும் உண்டு. யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம். யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். யோகாவால் ஏற்படும் நன்மைகள்: உடலின் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் பலம் அடைகின்றன. அதனுடன் சேர்ந்து புத்துணர்ச்சி பெருகின்றது. ரத்த ஓட்டம் சீரடைந்து, நல்ல சிந்தனை, செயல் உண்டாகும். முழுவதும்… Read More
வணக்கம். அன்பர்களே!! நாம் அனைவரும் அறிந்த ஏலக்காய் பற்றி இணையத்தில் நான் அறிந்ததை உங்கள் பார்வைக்கு. பலர் சூயிங்கம் சாப்பிடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக்… Read More
We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.