இந்தியாவில் எஞ்சியுள்ள நாட்டு மாடுகள் இவைதான்!
முன்னர் இந்தியாவில் 130-க்கும் மேல் நாட்டு மாட்டு இனங்கள் இருந்திருக்கிறது. முன்னோர்கள் ஒவ்வொரு மாட்டு இன வகைகளையும் ஒவ்வொரு வேலைக்காகவும், தங்களின் தேவைக்காகவும் பயன்படுத்தி வந்தனர். மாடுகளை வீட்டு விலங்காக பழக்கப்படுத்திய முதல்நாடும் இந்தியாதான். முக்கியமாக காளை இனங்களை காப்பதற்காக உருவாக்கிய வீரவிளையாட்டுதான் இந்த ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் காளைகளை கலந்துகொள்ளச் செய்து வருடத்தின் மற்ற நாட்களில் உழவு சார்ந்த தொழிலுக்காகவும், இன விருத்திக்காகவும் பயன்படுத்திக்கொண்டான் மனிதன். முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான். நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம். இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை… Read More