X

BBAuthor

கூகுளின் ‘தேஜ்’

நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அனைவருக்கும் உடனடியாக வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்ப, இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் யூபிஐ சேவையில் இணைந்து 2017 செப்டம்பர் 18 முதல் கூகுள் புதிதாகத் துவங்கியுள்ள சேவையே 'தேஜ்' ஆகும். கூகுள் தேஜ் செயலியில் தற்போது உள்ள அம்சங்கள், யூபிஐ உதவியுடன் வங்கி கணக்கை தேஜ் செயலியில் இணைப்பதன் மூலம் உடனடியாக, நேரடியாக வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பலாம். இதற்கு அவர்களது வங்கி கணக்கில் யூபிஐ சேவை இருக்க வேண்டும், அவர்களின் யூபிஐ ஐடி உங்களிடம் இருக்க வேண்டும். தேஜ் செயலி கூகுள் நிறுவனத்தில் நேரடி 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கும். இதனால் மோசடிகள், ஹேக்கிங் போன்றவற்றைச் செய்ய முடியாது. யூபிஐ பின் மட்டும் இல்லாமல் கூகுள் பின் அல்லது கைவிரல்ரேகை அளித்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்ய முடியும். இந்தியாவில் ஏதேனும் வங்கிகளில் கணக்கு, இந்திய மொபைல் எண் உள்ளிட்டவை தேவை… Read More

மகாளய அமாவாசை

ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம்.ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம்… Read More

சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம்

வணக்கம். நம்முடைய திருவள்ளுவர் மழை மற்றும் நீர் பற்றிய குறள். "வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று." Translation: The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives. "நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு." Translation: When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'. மு‌‌ந்தைய கால‌த்‌தி‌ல் கோடை‌க் கால‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் ‌வீ‌ட்டு‌க்கு வெ‌ளியே பானையோ அ‌ல்லது ஒரு பா‌த்‌திரமோ வை‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌ப்பா‌ர்க‌ள். வ‌ழி‌யி‌ல் செ‌ல்வோ‌ர் அ‌ந்த ‌நீரை‌க் கு‌டி‌த்து தாக‌ம் ‌தீ‌‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்ற ந‌ல்ல நோ‌க்க‌த்தோடு. தண்ணீர் இயற்கை நமக்கு வழங்கிய மிகப்பெரிய… Read More

மந்திரம் ஓம்

ஓம் மந்திரத்தை பற்றிய பதிவு!! பத்மாசனத்தில் அமர்ந்து இடது கைப்பெருவிரலால் இடது மூக்கை மூடி வலது நாசியால் மூச்சை உள்ளிழுத்து இடது கை மோதிர விரல் கொண்டு வலது நாசியை மூடி இடது நாசியால் மூச்சை வெளிவிடுவது என்பதை மூச்சு பயிற்சி என்கிறோம். இதில் மூச்சை உள்ளிழுப்பதை பூரகம் என்பார்கள். வெளிவிடுவதை ரேசகம் என்பார்கள். நன்றாக மூச்சு பயிற்சியை கற்றவர்கள் அதன் அடுத்த படியான மூச்சை உள்ளுக்குள் அடக்கி நிறுத்தி வெளிவிடும் பயிற்சியை மேற்கொள்ளலாம். மூச்சை அடக்கும் நிகழ்வை கும்பகம் என்பார்கள். எடுத்த எடுப்பில் மூச்சை அடக்கி வெளிவிடுதல் உடலுக்கு மிகவும் கெடுதலான பலனை தரும் என்பார்கள். எனவே, சாதாரண வாழ்வில் இருக்கும் அனைவருக்கும் ஏற்றது ஓம் என்னும் தியான மூச்சு பயிற்சி. அதாவது, ஓம் என்ற ஒலி தான் இந்த மூச்சு பயிற்சியின் சூட்சுமம். மூச்சை முடிகிற வரை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போது மார்பு நன்றாக விரிந்து… Read More

இந்திய பொறியாளர்கள் தினம்

இந்தியாவில், Sir பட்டம் பெற்ற பாரத ரத்னா விருது வென்ற இந்தியாவின் தலைசிறந்த பொறியாளரான, Sir MV என்று பரவலாக அறியப்பட்ட ’மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15’ஐ ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. ’மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ 1860ம் ஆண்டு மைசூரில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் தன் 12ம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது பள்ளி படிப்பை சிக்கபல்லாபுராவிலும், இளங்கலை பட்டத்தை செண்டரல் காலேஜ், பெங்களூரிலும் முடித்தார். பின் கட்டிட பொறியியல் (civil engineering) படிப்பை புகழ்பெற்ற பூனே பொறியியல் கல்லூரியில் பயின்றார். ஆரம்பத்தில் மும்பை பொதுப்பணித்துறையில் வேலை பார்த்த இவர் பின்னாளில் இந்திய நீர்ப்பாசன கமிஷனில் பணியை தொடர அழைக்கப்பட்டார். இந்திய நீர்ப்பாசன துறையில் வேலை பார்த்த காலத்தில் மிகவும் சிக்கலான நீர்ப்பாசன அமைப்பை தக்காணப் பீடபூமி பகுதியில் செயல்படுத்தினார். இவரின் புகழுக்கு உச்சமாக கருதப்படுவது தெலுங்கானா ஹைதராபாத் நகரில் வெள்ளப்… Read More

சர்வதேச மக்களாட்சி தினம்

மக்களாட்சி அல்லது சனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத், பிரதிநிதிளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர். மக்களாட்சியின் பண்புகள் ஜனநாயகத்தில் சட்ட சமத்துவம், அரசியல் சுதந்திரம் மற்றும் சட்ட விதிமுறை ஆகியவை முக்கிய அம்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.. இந்த நியமங்கள் எல்லா தகுதியுள்ள குடிமக்களுக்கும் சட்டத்திற்கு முன் சமமாக இருப்பதுடன், சட்டப்பூர்வ செயல்முறைகளுக்கு சமமான அணுகலைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்குக்கும் சமமான எடை உள்ளது தகுதிவாய்ந்த குடிமக்களின் சுதந்திரம் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியன பொதுவாக ஒரு அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.. மக்களாட்சியின் கோட்பாடுகள் ஜனநாயகத்திற்கு மூன்று அடிப்படைக் கோட்பாடுகள் தேவைப்படுகிறது:… Read More

அவல் போண்டா

தேவையான பொருட்கள் அவல் – ஒரு கப் (பொடி செய்தது) வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு – அரை கப் கடலை மாவு – கால் கப் உப்பு – தேவைகேற்ப பெருங்காயம் – சிறிதளவு இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – மூன்று (பொடியாக நறுக்கியது) கரிவேபில்லை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் அவல், உருளைக்கிழங்கு மசித்தது, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். Read More

பன்னீர் கோபி கோஃப்தா

தேவையான பொருட்கள் காளிஃப்ளவர் – கால் கப் (முக்கால் வேக்காடு வேகவைத்தது) உருளைக்கிழங்கு – கால் கப் (வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் மிளகு தூள் – அரை டீஸ்பூன் கரம் மசாலா – அரை டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப பன்னீர் – கால் கப் (பொடியாக நறுக்கியது) மைதா மாவு – சிறிதளவு க்ரேவி செய்ய: எண்ணெய் – தேவையான அளவு தக்காளி விழுது – அரை கப் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாய் தூள் – ஒன்றை டீஸ்பூன் கரம் மசாலா – அரை டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன் ப்ரெஷ் க்ரீம் – இரண்டு டீஸ்பூன் பால் – அரை டம்ளர் (காய்ச்சிய பால்) கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை ஒரு கிண்ணத்தில் வேகவைத்த காளிஃபிளவர், வேகவைத்த உருளைக்கிழங்கு,… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.