X

BBAuthor

இன்று-14ஆவணி

வணக்கம்! இன்று ஸ்ரீ விளம்பி வருடம் ஆவணி 14ம் நாள் மகாசங்கடஹர சதுர்த்தி. திருக்குறள்: மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. - குறள் 409. சமையல் குறிப்பு இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும். காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும். ஆன்மீகம் பிள்ளையார் வழிபாடு, நாம் நமது வீட்டில் சுலபமாக வழிபடும் முறைகள் மற்றும் சிறப்பு. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய… Read More

கருத்து கணிப்பு

Read More

ஆவணி-13

வணக்கம் இன்று ஸ்ரீ விளம்பி வருடம் ஆவணி மாதம் 13ம் நாள் புதன்கிழமை. திருக்குறள்: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. ஆன்மீக தகவல்: ராமாயணத்தை இந்தியில் "ராமசரிதமானஸ்' துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும், "பந்தௌ நாம ராம் ரகுபர் கோ! ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!! பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ! அகுண அனூபம் குண நிதான் ஸோ!! " என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும். இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம். ""ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்'' இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை… Read More

இன்று-20-ஆவணி

வணக்கம்! இன்று ஆவணி 4ம் நாள் ஸ்ரீவிளம்பி வருடம் திங்கக்கிழமை. திருக்குறள்: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இன்று: சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் சூரிய சக்தியை திரவ வடிவில் மற்றும் ரசாயன கலவையாக சேமிக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார். இந்த தொழில்நுட்பத்தை 'மாலிகுலர் சோலார் தெர்மல்' (MOST) என்று அழைக்கிறார்கள்.Read More Read More

இன்று – இந்திய சுதந்திரதினம்

வணக்கம். இன்று - ஆடி 30ம் நாள், 72வது இந்திய சுதந்திர தினம். காயத்ரீ மந்திரம் ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத். இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கிட்டும். மேலும் தெரிந்துகொள்ள இங்கு சுட்டவும் வாழ்க வளமுடன்! Read More

இன்றைய நாள்-ஆடி பூரம்

வணக்கம்! இன்று ஆடி 28 பூரம் நட்சத்திரம்(ஆடி பூரம்). மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது.இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஆடி பூரம் பற்றி தெரிந்து கொள்ள இங்கு சுட்டுக. இன்றைய பழமொழி எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன. திருக்குறள்: குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. உலகத்தில் இன்று: சர்வதேச உடல் உறுப்பு தான தினம் சர்வதேச இடது கையாளர்கள் தினம் Read More

ஆடி அமாவாசை

வணக்கம். நமது அறிவியல் மற்றும் ஆதி கால மனிதனின் கூற்றுபடி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும்; பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன எனவும்; பூமி தனது அச்சில் 23 ½ பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன என்றும் நாம் அறிந்ததே. பூமி மற்றும் சந்திரன் பற்றிய சில அறிவியல் குறிப்பு சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது. இதனால் நம்மால் சந்திரனை காண முடியவில்லை. அப்படி சந்திக்கும் நேரத்தில் சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, அமையும் போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. இதுவே பௌர்ணமி; மாற்று கூற்றில் அமாவாசை. சூரியனைப் “பிதுர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது.… Read More

மழை பெய்ய ஸ்லோகம்

என்னடா தலைப்பை பார்த்து சிரிப்பா இருக்கா. இந்த நவீன உலகத்தில் இதல்லாம் நடக்குமா என்று. முயற்சி பண்ணுவோமென சின்னதாக ஒரு கண்ணொளி. மழை பெய்ய வைக்கும் ஸ்லோகம் காஞ்சி மகாபெரியவர் அருளியது. ஒரு சமயம் காஞ்சி மகாபெரியவர், ஒரு ஆடிமாதத்தில் திருவையாறுக்கு அருகில் உள்ள காருகுடி என்னும் கிராமத்துக்கு வந்தார். வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்கள், வறட்சியைப் போக்க அவரிடம் வழி கேட்டார்கள். ரிச்யச்ருங்காய முநயே விபண்டக ஸுதாயச நம: சாந்தாதி பதயே ஸத்ய: ஸத் வ்ருஷ்டி ஹேதவே. விபண்டகஸுத: ஸ்ரீமாந் சாந்தாபதி ரகல்மஷ: ரிச்ய ச்ருங்க இதிக்யாத: மஹாவர்ஷம் ப்ரயச்சது: அப்போது மகா பெரியவர், மேற்கண்ட இரண்டு ஸ்லோகங்களை தினமும் ப்ரணாயாமம் செய்யும்படி அருளினார். நாமும் மனப்பூர்வமாகப் பாடி, மழைவளம் பெறுவத்திற்கான ஒரு சின்ன முயற்சி. Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.