X

இன்று வைகாசி 29 ம் நாள்

சாணக்கியரின் முக்கியமான வாழ்க்கை தத்துவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை இதோ உங்களுக்காக சில ஒரு வேலையை தொடங்கும் முன் நீங்கள் உங்களுக்குள்ளேயே மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். நான் ஏன் இதை செய்கிறேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? மற்றும் இதில் நான் வெற்றி பெறுவேனா?. இந்த மூன்று கேள்விகளுக்கும் உங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைத்தால் மட்டும் அந்த காரியத்தை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் தகுதிக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கும் எவரிடமும் ஒருபோதும் நட்பை வளர்த்து கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களால் உங்களுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி கிடைக்காது. ஒரு வேலையை தொடங்கிய பிறகு அது தோல்வியில் முடிந்துவிடும் என்று நினைத்து ஒருபோதும் பின்வாங்கி விடாதீர்கள். ஏனெனில் உண்மையாக உழைப்பவர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் ஆவர். Read More

BBAuthor

இன்று – வைகாசி 22 ம் நாள்

வணக்கம்! இன்று வைகாசி 22 ம் நாள், திருவாதிரை நட்சத்திரம்; ரமலான் திருநாள். "மனிதன் ஆசைக்கு அளவு இல்லை, அதுபோல் அவனுடைய ஆற்றலுக்கு அளவு இல்லை" துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே ஆசைகளை நினைத்து வாழ்கையை இழக்காதே சோதனையை நினைத்து சாதனையை இழக்காதே தோல்வியை நினைத்து வெற்றியை இழக்காதே Read More

BBAuthor

இன்று-மகா சிவராத்திரி

வணக்கம். இன்று மாசி மாதம் சிவராத்திரி. சிவனைப் போற்றும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு வழக்கம் இந்த சிவராத்திரி. ஏன் சிவராத்திரி - பொதுவாக ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி அதற்கு முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி, அந்த நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாகத்துன்பங்களை அனுபவிக்கின்றனர். இது அவர்களை அறியாமலேயே ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் சந்திரன் மனோகாரகன். மனதையும் அதன் எண்ணங்களையும் ஆள்பவன். மனநோயாளிகள் அமாவாசையை ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு ஆளாவதும் இதனால்தான். மேற்படி நாட்களில் வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுஅனுபவத்தில் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சாதாரணமானவர்களுக்கு மேற்படி நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும். இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில் இதை உணராமல்… Read More

BBAuthor

அறிவோமா உடல்

வணக்கம். இது ஒரு அறிவியல் பதிவு. நாம் எல்லோரும் அறிந்த அல்லது மறந்த நம் உடல் பற்றிய ஓர் தொகுப்பு. மனித உடலில் 93 சதவிகிதத்திற்கும் அதிகமானவை மூன்று இரசாயன கூறுகளைக் கொண்டிருக்கின்றன. ஆக்ஸிஜன் (65%), கார்பன் (18.5%) மற்றும் ஹைட்ரஜன் (10%). நைட்ரஜன் (3%), கால்சியம் (1.5%) மற்றும் பாஸ்பரஸ் (1%) ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. உயிரணுக்களின் ஆயுள்காலம் வெள்ளை இரத்தம் - 1 நாளுக்கு குறைவாக. தோல் செல்கள் - 30 நாட்கள். கல்லீரல் செல்கள் - 12-18 மாதங்கள். தசை செல்கள் - 15 ஆண்டுகள். வாழ்க வளமுடன்! நலமுடன் Read More

BBAuthor

அறிவோம் பயனுள்ள Andriod அப்ப்ளிகேஷன்

வணக்கம்! கூகுளின் பயனுள்ள மிக குறைந்த அளவு நினைவகம் எடுத்துக்கொள்ளும் Andriod அப்ப்ளிகேஷன். முதலாவது உங்கள் தொலைபேசியில் தரவு சேமிப்பதை நிர்வகித்து,கட்டுப்படுத்த Google Datally https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.freighter&hl=en_US உங்கள் மொபைல் தரவைச் சேமிக்கும், நிர்வகித்து, பகிர்ந்து கொள்ள உதவுகிறது Google இன் ஸ்மார்ட் பயன்பாடாகும் Datally. மொபைல் தரவின் 30% வரை சேமிக்க , பின்னணியில் தெரியாமல் தரவைப் பயன்படுத்துகின்ற பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. நெட்வொர்க்கின் தரத்தை அறிந்து கொள்ள Wi-Fi க்கு அருகில் இணைக்கவும், மதிப்பிடவும். உங்கள் ஹாட்ஸ்பாட்டிலிருந்து உங்கள் நண்பர்களைப் பயன்படுத்தக்கூடிய தரவின் அளவிற்கு ஒரு எல்லை அமைக்கவும். நினைவூட்டலைப் பெறுக அல்லது வரம்பை அடைந்துவிட்டால் ஹாட்ஸ்பாட்டை நிறுத்தவும் உதவுகிறது. தேவையற்ற மொபைல் தரவுப் பயன்பாட்டைத் தடுக்க உங்கள் சாதனத்தில் ஒரு உள்ளூர் வர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (VPN) சேவையை Datally அமைக்கிறது - இது Google இன் சேவையகங்களில் உங்கள் பயன்பாட்டு பயன்பாட்டுத் தரவை எந்த தகவலையும் அனுப்பாது. Datally… Read More

BBAuthor

இன்று-தை 29ம் நாள்

வணக்கம். இணைய நண்பர்களே. இன்று தை கடைசி செவ்வாய் கிழமை ரத சப்தமி. நாளை பீமாஷடமி மற்றும் கிரகங்களின் பாம்பு கிரகங்களாகிய ராகு,கேது பெயர்ச்சி. ராகு காயத்ரி 'நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத்' ராகுவிற்கு எந்த ராசியும் சொந்தம் இல்லை ஆனால் எந்த ராசியில் இருக்கின்றாரோ சேர்க்கை பெற்றுள்ளாரோ அதன் முழுப்பயன் தருவார். கேது காயத்ரி 'அச்வ த்வாஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ கேது ப்ரசோதயாத்' அறிவோம் புராணம் மற்றும் இதிகாசம் மனு என்பவர் கி.மு. 500-ல் எழுதிய நூலின் பெயரே "மனுஸ்மிரிதி", இந்த நூலானது 12 பாகங்களைக் கொண்டது. இந்த நூலின் சிறப்பு பல சாஸ்திரங்கள் மற்றும் விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்துக்கள் ஆகிய நாம் அறிந்து பயன் அடைவோமாக. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். Read More

BBAuthor

இன்று-தை 28ம் நாள் – திங்கக்கிழமை

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு - குறள் 74 செய்திகள்: சென்னைவாசி மக்களே, நேற்று மெட்ரோரயில் வண்ணாரப்பேட்டை வரை திறந்த நிலையில் நேற்று முதல் இன்று (11-02-2019) இரவு வரை இலவசமாக பயணிக்கலாம். விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் - கோயம்பேடு - பரங்கிமலை என மொத்தமுள்ள 45 கி.மீ தூரத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. பேஸ்புக் சமூக ஊடக நிறுவனத்தின் சொந்த AI வேலை ஒரு நடவடிக்கை காட்சி ஷாப்பிங்(Visual Shopping) மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடக்க GrokStyle நிறுவனத்தை வாங்கியது. பொது அறிவு. ஒலி மாசு எனப்படுவது எத்தனை டெசிபலுக்கு மேல்? ஆன்மீகம் : ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் அங்குல்யா பரண சோபிதம் சூடாமணி தர்சனகரம் ஆஞ்சநேய மாஸ்ரயம் வைதேஹி மனோகரம் வானர சைன்ய சேவிதம் சர்வமங்கள கார்யானுகூலம் சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ஸ்ரீராம்… Read More

BBAuthor

இன்று – தை 24ம் நாள் வியாழக்கிழமை

வணக்கம். தை 24ம் நாள் கடைசி வியாழக்கிழமை. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும் - குறள் 553 மு.வ உரை: நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான். தெரியுமா: 1.5 பில்லியன் மக்கள் ஒவ்வொரு மாதமும், மற்றும் 5 டாலர்கள் செலுத்தி வணிகம் ஜி சூட் ஒரு பகுதியாக ஜி-மெயிலை பயன்படுத்துகின்றனர் . ஒன்றாக நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு, Gmail இன் சமநிலை ஒரு பெரிய பகுதியாக அதன் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள் உள்ளது. மேலும் கூகுளை ஒரு மில்லயன் ஸ்பேம் மெயில்களை தனது A.I மூலம் தெரியப்படுத்தி அழிக்கிறது. Read More

BBAuthor

இன்று-21 தை திங்கள்

வணக்கம். இன்று தை அமாவாசை. எத்தனையோ துன்பங்களை கடந்து வந்துவிட்டேன் இருந்தும் மனதில் ஒருவித எண்ணம் இன்னும் இந்த வாழ்க்கையில் என்னென்ன கற்பிக்க இருக்கிறதோ. நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.Read More Read More

BBAuthor

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வணக்கம்! நண்பர்களே, மன்னிக்கவும் சில பணிச்சுமை காரணமாக எழுத இயலவில்லை. நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். Read More

BBAuthor

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.