X
    Categories: Tips

குறிப்பு

Views: 33

நாயுருவி வேரைக் கொண்டு பல்விளக்கினால் பற்களில் காறை இருந்தாலும் பழுப்பு இருந்தாலும் நீங்கித் தூய்மையாகும். கரிசலாங்கண்ணி கொண்டும் பல்விளக்கலாம். பல்வலி, பல்சொத்தை, ஈறு கூச்சம் ஆகியவற்றுக்கு வெங்காயச் சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்புளிக்கவும்.

கண்டங்கத்தரிக் காய்/ பழத்தைக் காயவைத்து சேர்த்து வைத்திருக்க. விதைகளைச் சுட்டுப் புகையைச் சொத்தைப் பல்லில் படச் செய்தால் சொத்தை நீங்கும்; பல்வலியும் நீங்கும். புளியும் உப்பும் கலந்து ஈறுகளில் தேய்த்தால் பல்லரணை என்னும் ஈறு வீக்கம் போகும்; பல் வலியின் போது சொத்தைப் பல்லின் மேல் வைத்தால் வலி நீங்கும்

Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.