X

‌விடுகதைக‌ள்

Views: 247

  1. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
  2. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
  3. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
  4. பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல, பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல. அது எது?
  5. உலகை எல்லாம் உப்பிட்டு வளர்த்தவர் யார்?
  6. நின்று கொண்டே இருந்துவிட்டு பலருக்கும் வழி கூறுவான்.
  7. உழைக்க உழைக்க உடலெல்லாம் தோன்றும் – அது என்ன?
  8. கையால் இழுத்தால் அசையும் நாக்கு, கணீரென்று அனைவரையும் அழைக்கும் – அது என்ன?
  9. ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் – அது என்ன?
  10. ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் – அது என்ன?
  11. ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்?
  12. அவனுக்கு காவலுக்கு ஒரு வீடு, வாழ்வதற்கு ஒரு வீடு – அவன் யார்?
  13. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?
  14. அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை – அவன் யார்?
  15. உணவு கொடுத்தால் வளருவான், நீர் கொடுத்தால் மாண்டு போவான் – அவன் யார்?

View Comments (1)

  • 1. பட்டாசு
    2.எறும்புக் கூட்டம்
    3.அஞ்சல் பெட்டி
    4.வெளவால்
    5.கடல்
    6.வழிகாட்டிப் பலகை
    7.வியர்வை
    8.மணியோசை
    9.கத்தரிக்கோல்
    10.இமைகள்
    11.நிழல்
    12.ஆமை
    13.பந்து
    14.வெண்டைக்காய்
    15.நெருப்பு

Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.