X

அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்

Views: 127

வணக்கம் நண்பர்களே!! நாம் அனைவரும் நன்கு அறிந்த பழமொழி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. நாம் உண்ணும் உணவு அதிகம் ஆனால் என்ன வளைவு என்பதை நான் படித்ததை  உங்களுக்கு பகிர்கிறேன்.

  • பச்சரிசி அதிகமானால்-சோகை நோய்
  • அச்சுவெல்லம் அதிகமானால்-அஜீரணம்
  • பலகாரம் அதிகமானால்-வயிற்று வலி
  • இஞ்சி அதிகமானால்-மென் குரலும் இறுக்கமாகும்
  • பழைய சோறு, கஞ்சி அதிகமானால்-வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்
  • தேங்காய் அதிகமானால்-சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்
  • மாங்காய் அதிகமானால்-வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
  • கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால்-வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்
  • பாதாம் பருப்பு அதிகமானால்-வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
  • முற்றிய முருங்கை சாப்பிட-வாயு சளி உண்டாகும்
  • எருமைப்பால் அதிகம் குடிக்க-கிட்னி கல், அறிவு மங்கும்
  • மிளகு-உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
  • மிளகாய் அதிகமானால்-வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
  • காபி அதிகமானால்-கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.
  • டீ அதிகமானால்-உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்
  • எலுமிச்சை அதிகமானால்-பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.
  • எள்ளு அதிகமானால்-பித்தம் செரியாமை உண்டாகும்.
  • உப்பு அதிகமானால்-எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்
  • வெங்காயம் அதிகமானால்-தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்
  • குங்குமப்பூ அதிகமானால்-மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.
  • வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்மென நான் நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி…

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.