Views: 127
வணக்கம் நண்பர்களே!! நாம் அனைவரும் நன்கு அறிந்த பழமொழி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. நாம் உண்ணும் உணவு அதிகம் ஆனால் என்ன வளைவு என்பதை நான் படித்ததை உங்களுக்கு பகிர்கிறேன்.
- பச்சரிசி அதிகமானால்-சோகை நோய்
- அச்சுவெல்லம் அதிகமானால்-அஜீரணம்
- பலகாரம் அதிகமானால்-வயிற்று வலி
- இஞ்சி அதிகமானால்-மென் குரலும் இறுக்கமாகும்
- பழைய சோறு, கஞ்சி அதிகமானால்-வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்
- தேங்காய் அதிகமானால்-சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்
- மாங்காய் அதிகமானால்-வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
- கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால்-வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்
- பாதாம் பருப்பு அதிகமானால்-வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
- முற்றிய முருங்கை சாப்பிட-வாயு சளி உண்டாகும்
- எருமைப்பால் அதிகம் குடிக்க-கிட்னி கல், அறிவு மங்கும்
- மிளகு-உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
- மிளகாய் அதிகமானால்-வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
- காபி அதிகமானால்-கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.
- டீ அதிகமானால்-உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்
- எலுமிச்சை அதிகமானால்-பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.
- எள்ளு அதிகமானால்-பித்தம் செரியாமை உண்டாகும்.
- உப்பு அதிகமானால்-எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்
- வெங்காயம் அதிகமானால்-தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்
- குங்குமப்பூ அதிகமானால்-மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.
- வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம் கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்மென நான் நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி…